ஸ்ரீநகர், ஆக.5- ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியல மைப்பின் பிரிவு 370-ஐ ரத்து செய்து, 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி பாஜக-வினர் கொண் டாட்டங்களில் ஈடுபட்டனர். முன்னதாக, 370 நீக்கத்திற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கருத்த ரங்குகள், கண்டனக் கூட்டங்களுக் குத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவற்றுக்குத் தடைவிதித்த பாஜக அரசு, மாநிலத்தின் முன்னாள் முதல் வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி உள் ளிட்ட தலைவர்களை வெளியி லேயே வராதபடி, வீட்டுச் சிறை வைத் தது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370-ஐ கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ஒன்றிய பாஜக அரசு தடாலடியாக நீக்கியது. முன்னதாக, தங்களின் நடவ டிக்கை காஷ்மீரில் பெரும் கொந்த ளிப்பை உருவாக்கும் என்பதை உணர்ந்த மோடி அரசு, ஜம்மு -காஷ்மீ ரின் அரசியல் தலைவர்களை முன் கூட்டியே கைது செய்து சிறையில் அடைத்தது. யாரும் போராட்டத்தில் இறங்கிவிடாதபடி தந்திரமாக இந்த வேலையைச் செய்தது. சுமார் ஓராண்டுக்குப் பிறகே தலைவர் களை விடுவித்தது. எனினும், இப் போதுவரை ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்பவில்லை. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருக்கி றதா? என்பது தொடர்பான வழக்கு நான்காண்டுகளுக்குப் பிறகு, தற் போதுதான் உச்சநீதிமன்றத்தின் அர சியல் சாசன அமர்வில் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, 2023 ஆகஸ்ட் 5-ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடை வதையொட்டி, ஜம்மு - காஷ்மீரில் எதிர்க்கட்சிகள் கருத்தரங்கிற்கு திட்ட மிட்டிருந்தன. காவல்துறையில் முறைப்படி அனுமதியும் கோரியி ருந்தன. ஆனால், அவர்களுக்கு அனுமதி வழங்காத காவல்துறை, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலை வர்களை வீட்டுச்சிறையில் அடைத் துள்ளது. குறிப்பாக, மக்கள் ஜனநாயக கட்சி ஸ்ரீநகர் நிர்வாகத்திடம் அனு மதி கேட்டிருந்தது. கட்சி அலுவல கத்துக்கு அருகில் இருக்கும் ஷேர் இ- காஷ்மீர் பூங்காவில் நடக்க இருந்த இந்த நிகழ்ச்சிக்கு ஒத்த சிந்த னையுடைய கட்சிகளுக்கு பிடிபி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு எவ்விதக் காரணம் கூறா மல் அதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. மாறாக, பிடிபி-க்கு அனுமதி மறுக்கப்பட்ட அதேநேரத்தில், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை கொண் டாடும் வகையில், நேரு பூங்காவில் நிகழ்ச்சிக்கும் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து எஸ்கேஐசிசி வரை பேரணி நடத்தவும் பாஜகவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த இரட்டை செயல்பாட்டை கண்டித்துள்ள பிடிபி செய்தித் தொடர்பாளர், “இது காஷ்மீர் நிர்வாகம் மற்றும் நாடு.. இந்த இரண்டும் சட்டம் மற்றும் அரசியலமைப்புப்படி இல்லை; மாறாக பாஜகவின் அரசியல் கொள்கைகளால் நிர்வகிக்கப்படு கிறது என்ற எங்களின் நிலைப் பாட்டை மீண்டும் மீண்டும் நிரூபிக்கி றது” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, தேசிய மாநாட்டுக் கட்சியும், தங்கள் கட்சி அலுவல கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி அலு வலகத்துக்கும் பாஜக அரசின் காவல் துறை சீல் வைத்துள்ளது. “அரசு நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை அவர்களின் பதற்றத் தையும், கடந்த 4 ஆண்டுகளாக மாநி லத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது என்ற அவர்களின் முழக்கங்க ளின் தோல்வியையும் காட்டுகின் றது” என்று தேசிய மாநாட்டுக் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளது. “மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களுடன் நான் வீட் டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். நள்ளிரவில் நடந்த அடக்கு முறைக்குப் பின்னர் எனது கட்சி யைச் சேர்ந்த பலர் சட்டவிரோத மாக காவல் நிலையங்களில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலை குறித்து உச்ச நீதி மன்றத்துக்கு இந்திய அரசு வழங்கி யுள்ள பொய்யான அறிக்கைகள் அவர்களின் அச்ச உணர்வினால் உந்தப்பட்டுள்ளன.
ஒருபுறம், சட்டத்துக்கு புறம்பாக 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட தைக் கொண்டாட காஷ்மீர் மக்க ளுக்கு அழைப்பு விடுக்கும் ராட்சஷ பேனர்கள் நகர் முழுவதும் வைக் கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மக்களின் இயல்பான உணர்வு களை அடக்கும் வகையில் மிருகத்தன மான அடக்குமுறை பயன்படுத்தப் படுகிறது. சட்டப்பிரிவு 370 ரத்து குறித்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள இந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் இதனை எல்லாம் கணக்கில் எடுத் துக்கொள்ளும் என்று நான் நம்புகி றேன்” என்று மக்கள் ஜனநாயக கட்சி யின் தலைவர் மெகபூபா முப்தி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வீடியோக் களுடன் நீண்ட பதிவொன்றை வெளி யிட்டுள்ளார். “ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு முன்பு ஜம்மு - காஷ்மீர் காவல்துறை பிடிபி கட்சித் தலைவர்களை காவலில் எடுக்கிறது. அதேநேரம் சட்டவிரோத மாக பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட தைக் கொண்டாடும் ‘தமாஷ்’ களுக்கு பாஜக அரசு இலவச அனு மதி அளிக்கிறது. இவை அனைத்தும் நாட்டுமக்களின் கருத்துக்களை திசைதிருப்பவே செய்யப்படுகின் றன. மாநிலத்தில் இயல்பு நிலை இருப்பதாக காட்டுவதற்காக உரு வாக்கப்படும் போலியான இந்தக் கதைகள் அவர்களின் சட்டவிரோத செயல்களையே காட்டுகிறது” என் றும் மெகபூபா முப்தி குறிப்பிட் டுள்ளார்.